‘தேவையில்லாமல் பேசி சிக்கலை இழுக்காதீங்க’ – எச்.ராஜாவின் பேச்சு குறித்து சீமான் கருத்து

ஒரு பீகாரிய பார்ப்பனன் என்னைய பார்த்து மலையாளி என்று கூறுவதா? என சீமான் பேச்சு. 

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம், சீமான் மலையாளி என கூறியது தொடர்பாக கருத்து கேட்டனர்.

அதற்கு பதிலளித்த அவர், ஒரு பீகாரிய பார்ப்பனன் என்னைய பார்த்து மலையாளி என்று கூறுவதா? இவரை இங்க நடமாட விட்டது நாங்க செய்த தப்பு. ராஜாவிடம் சொல்லி வைத்துக்கொள்ளுங்கள். தேவையில்லாமல் பேசி சிக்கலை இழுக்காதீங்க என்று தெரிவித்துள்ளார்.

மேலும், திமுக அமைச்சர்கள் பேச்சு குறித்தும் அவர் கூறுகையில், முதல்வருக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே அவ்வாறு பேசி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment