மங்காத்தா படத்தில் அர்ஜுனுக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தவர் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியான திரைப்படம் மங்காத்தா. இது, தல அஜித்தின் 50-வது படமாகும். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது .
இந்த படத்தில் அர்ஜூன்,திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். அதிலும் தல அஜித் இந்த படத்தில் வில்லனாக நடித்து அசத்தி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த பாராட்டுகளைப் பெற்றார். அதன் வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் மங்காத்தா 2 எப்போது என்று கேட்டு வருகின்றனர்.
நேற்றுடன் படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனை அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் கொண்டாடி தீர்த்தனர். இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், அர்ஜுன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
அதாவது, இந்த படத்தில் அர்ஜுன் நடித்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது, தெலுங்கு முன்னணி நடிகரான நாகார்ஜுனா தானாம். கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால், இப்படத்தில் நடிகர் நாகார்ஜுனாவால் நடிக்கமுடியாமல் போனதாக கூறப்படுகிறது.
IPL2024: இந்த வெற்றியின் மூலம் இரவில் நாங்கள் நிம்மதியாக உறங்குவோம் என்று பெங்களூரு கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணி…
Vettori : ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி தோல்விக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சன் ரைஸர்ஸ்…
VVPAT Case : விவிபேட் தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவின் போது , EVM இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளோடு, விவிபேட் எனப்படும் வாக்குப்பதிவு…
WhatsApp : எண்டு டு எண்டு என்கிரிப்ஷன்-ஐ நீக்க நினைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம் என வாட்ஸ்அப் கூறியுள்ளது. உலகளவில் அதிக ஸ்மார்ட் போன் பயனர்களால் பயன்படுத்தப்படும்…
Kerala Election: கேரளாவில் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், 9 மணி நிலவரப்படி 11.98% வாக்கு பதிவானதாக தகவல். இன்று நாடு முழுவதும்…
Pinarayi Vijayan: கேரளாவின் கண்ணூர் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…