இயக்குனர் வெங்கட் பிரபுவின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில், சென்னை 28 இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் வெங்கட் பிரபு. அதனை தொடர்ந்து சரோஜா, கோவாம் போன்ற படங்களை இயக்கியனார். அடுத்ததாக அஜித்தை வைத்து மங்காத்தா என்ற மிரட்டலான படத்தை கொடுத்து ரசிகர்களுக்கு மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார். கடைசியாக லைவ் டெலிகாஸ் என்ற வெப் தொடரை இயக்கியிருந்தார்.
இதுவும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தற்போது நடிகர் சிம்புவை வைத்து மாநாடு என்ற படத்தை இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மாநாடு படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு எந்த நடிகரை வைத்து படம் இயக்க போகிறார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், வெங்கட் பிரபு அடுத்ததாக பிரபல கன்னட நடிகர் சுதீப் நாயகனாக வைத்து ஒரு புதிய திரைப்படம் இயக்கவுள்ளதாகவும் அது, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராக உள்ளதாவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் அல்லது தமன் இருவரில் ஒருவர் இசையமைப்பாளராக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நடிகர் சுதீப் தமிழில் நான் ஈ, மற்றும் விஜய் நடிப்பில் வெளியான புலி படத்தில் அவருக்கு வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…