நாம் சாப்பிடும் அனைத்து உணவுப்பொருள்களுக்கும் உணவுப்பொருள் என்பதை தாண்டி பல்வேறு பலன்கள் உள்ளது. ஆனால், பெரும்பானோருக்கு அதை பற்றி தெரிவது கிடையாது. அந்த வகையில், உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு உணவுப்பொருள் என்னெவென்றால் உருளைக்கிழங்கு தான். எல்லாருடைய சமையலறைகளிலும் உருளைக்கிழங்கு கண்டிப்பாக இருக்கும் அதில் மாற்றமே இல்லை.
உருளைக்கிழங்கிற்கு சமையலறையைத் தாண்டியும் என்னடா பலன் இருக்கிறது என்று கேக்கிறீங்களா.? ஆம்… உருளைக்கிழங்கு நமது வீட்டை சுத்தமாக பராமரிப்பது முதல் காயங்களை ஆற்றுவது வரை பல நன்மைகளை கொண்டுள்ளது.
உங்கள் குழந்தைகள் பள்ளி அல்லது வீட்டில் விளையாடி கொண்டிருக்கும்போது, அழுக்கு அதிகமாக படுவதுவுண்டு, இதனை நீக்குவதற்கு கடினமாக துவைக்க வேண்டும். எனவே, ஆடையை துவைக்கும்போது அரை உருளைக்கிழங்கை கறையுள்ள பகுதியின் மீது நன்கு தேய்க்க வேண்டும். சட்டையில் உள்ள மை கறைகளிலும் நன்றாக போக்கும்.
அட ஆமாங்க உருளைக்கிழங்கு கண்ணாடியை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது. வெறும் உருளைக்கிழங்கை எடுத்து உங்கள் கண்ணாடி ஜன்னல்கள், கார் விண்ட்ஸ்கிரீன் மேல் தேய்க்கவும். இதன்மூலம் உங்கள் கைகளுக்கு சேதம் விளைவிக்காமல் ஒளிரும் கண்ணாடியை திரும்ப பெறலாம்.
சமைக்கும்போது தெரிந்தோ தெரியாமலோ உணவில் உப்பு அதிகமாகிவிட்டது என தெரிந்தால் அதனை வேஸ்ட் செய்ய வேண்டாம். அதற்கு பதிலாக அதில் சில உருளைக்கிழங்கு துண்டுகளை நறுக்கி போடவும். இதனை இப்போ சூடு வைத்தால் போதும் உப்பின் அளவை குறைத்துவிடும்.
உங்கள் பாத்திரங்கள் கறையுடன் காணப்பட்டால் அதனை சரி செய்ய உருளைக்கிழங்கை அசால்ட்டாக பயன்படுத்தலாம். பாத்திரத்தில் கறை இருக்கும் இடத்தில் உருளைக்கிழங்கை தேய்த்து நீரில் பாத்திரத்தை ஊறவைத்து விளக்குவது அல்லது உருளைக்கிழங்கு வேகவைத்த நீரில் பாத்திரத்தை ஊறவைத்து கழுவினால் பாத்திரம் பளிச்ன்னு பிரகாசமாக மாறிவிடும்.
உருளைக்கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் செடிகளை நன்றாக வளர்க்க உதவும். எப்படி எனறால்..? உருளைக்கிழங்கு எடுத்து கொண்டு அதில் ஒரு துளையிட்டு அதற்குள் செடியை வைத்து அதனை அதன்பின் அதனை மண்ணிற்குள் புதைக்கவும். இது செடி நன்கு வளர்வதற்கான ஊட்டச்சத்தை வழங்கும்.
WhatsApp : எண்டு டு எண்டு என்கிரிப்ஷன்-ஐ நீக்க நினைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம் என வாட்ஸ்அப் கூறியுள்ளது. உலகளவில் அதிக ஸ்மார்ட் போன் பயனர்களால் பயன்படுத்தப்படும்…
Kerala Election: கேரளாவில் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், 9 மணி நிலவரப்படி 11.98% வாக்கு பதிவானதாக தகவல். இன்று நாடு முழுவதும்…
Pinarayi Vijayan: கேரளாவின் கண்ணூர் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…
Election2024: வெறுப்பு அரசியலுக்கு எதிராக நான் வாக்களித்து உள்ளேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் வாக்குப்பதிவு இன்று 7 மணி முதல்…
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதிகிறது. ஐபிஎல்லின் 17-வது தொடரின் 42-வது போட்டியாக இன்றைய நாளில் கொல்கத்தா நைட்…
MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு…