தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தடுப்பூசிகளை வீணாக்கியதில் அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது என்றும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தடுப்பூசிகளை சிறந்த முறையில் பயன்படுத்தியதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது எனவும் கூறினார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வர வாய்ப்புள்ளது, தேர்தலில் திமுக 100% வெற்றிபெறும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் எந்த முறைகேடும் நடைபெறாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதுகுறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Online Scam : சமூகத்தளத்தில் தோனியின் பெயரை பயன்படுத்தி ரூ.600 வரை மோசடி செய்ய முயற்சி. இன்றைய நாட்களில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், X தளம் என்ற டிஜிட்டல் தளங்களில்…
Rajat Patidar : ஹைதராபாத் அணிக்கு எதிராக ரஜத் படிதார் ஆட்டம் பற்றி அஜய் ஜடேஜா புகழ்ந்து பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும்,…
Schools Reopen: புதுச்சேரி மாநிலத்தில் ஜுன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வரும் 29-ம் தேதி முதல்,…
Student Suicide : தெலுங்கானாவில் பள்ளி தேர்வில் தோல்வியடைந்ததால் இதுவரை 7 மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தெலுங்கானா பள்ளி கல்வி வாரியம் நடத்தும் 11 மற்றும்…
Olympic 2024 : இந்தியாவை சேர்ந்த நீளம் தாண்டும் தடகள வீரரான ஸ்ரீசங்கர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகி உள்ளார். இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய…
Weather Update: தமிழகத்தில் மே 1ம் தேதி முதல் வெப்ப அலை வீசக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே…