திமுக முப்பெரும் விழா – விருதுகள் அறிவிப்பு!

2022-ஆம் ஆண்டுக்கான முப்பெரும் விழா விருதுகள் பெறுவோரின் பெயர்களை அறிவித்தது திமுக.

விருதுநகரில் செப்டம்பர் 15-ஆம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் 2022-ஆம் ஆண்டுக்கான முப்பெரும் விழா விருதுகள் பெறுவோரின் பெயர்களை திமுக அறிவித்துள்ளது. அதன்படி, பெரியார் விருது – சம்பூர்ணம் சாமிநாதன், அண்ணா விருது – கோவை ரா.மோகன், கலைஞர் விருது – திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, பாவேந்தர் விருது – புதுச்சேரி சி.பி.திருநாவுக்கரசு, பேராசிரியர் விருது -குன்னூர் சீனிவாசன் ஆகியோருக்கு வழங்கபடுகிறது.

விருதுநகரில் புதிதாக கட்டப்பட உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டட தொடக்க விழா மற்றும் பட்டம் புதூா் பகுதியில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், செப்டம்பா் 15 ஆம் தேதி விருதுநகா் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment