திமுகவை சேர்ந்த முக்கிய பிரபலம் காலமானார் – முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

பெ.சு.திருவேங்கடம் அவர்கள் மறைவையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திமுகவின் மூத்த முன்னோடியும் கழகச் சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளருமான திரு. பெ.சு.திருவேங்கடம் அவர்கள் மறைவையொட்டி, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, முதல்வர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ‘ஒன்றிணைந்த வடார்க்காடு மாவட்டத்தில் கழகத்தை வளர்த்த மூத்த முன்னோடியும் கழகச் சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளருமான திரு. பெ.சு. திருவேங்கடம் அவர்கள் நேற்று இரவு உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். தாம் கழகத்துக்காக ஆற்றிய பணிகளுக்காக 2017-ஆம் ஆண்டு முப்பெரும் விழாவில் “அண்ணா விருது” பெற்ற பெருமைக்குரியவர் பெ.சு. திருவேங்கடம் அவர்கள்.

அவரை இழந்து வாடும் அவரது மகன் கலசப்பாக்கம் சட்டமன்ற – உறுப்பினர் பெ.சு.தி. சரவணன் அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் திருவண்ணாமலை மாவட்டக் கழகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment