#BREAKING: மேயர், துணை மேயர் பதவிக்கு வேட்பாளர்களை அறிவித்த திமுக..!

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். மேயர், துணை மேயர், சேர்மன் மற்றும் துணை சேர்மன் ஆகிய பதவிகளுக்கு நாளை மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கிடையில், கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு துணை மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான இடங்களை திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில், திமுக மேயர்,  துணை மேயர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

  • அதன்படி, சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு பிரியா ராஜனும், துணை மேயர் பதவிக்கு மகேஷ் குமார் போட்டியிடுவார் என திமுக அறிவித்துள்ளது.
  • ஆவடி மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ஜி.உதயகுமார் போட்டி, துணை மேயர் பதவி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
  • தாம்பரம் மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக வசந்தகுமாரி கமலக்கண்ணன் போட்டி, துணை மேயர் பதவிக்கு ஜி.காமராஜ் போட்டியிடுகிறார்.
  • திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவிக்கு பி.எம்.சரவணன் , துணை மேயர் பதவிக்கு கே.ஆர்.ராஜு போட்டியிடுகிறார்.
  • தூத்துக்குடி மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக அமைச்சர் கீதாஜீவன் சகோதரர் என்.பி.ஜெகன் போட்டி; துணை மேயர் பதவிக்கு ஜெனிட்டா செல்வராஜ் போட்டியிடுகிறார்.
  • சேலம் மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ஏ.ராமச்சந்திரன் போட்டி; துணை மேயர் பதவிக்கு தினேஷ்குமார் போட்டியிடுகிறார்.
  • வேலூர் மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக சுஜாதா அனந்தகுமார் போட்டி; துணை மேயர் பதவிக்கு சுனில் போட்டியிடுகிறார்.
  • தஞ்சை மாநகராட்சி மேயர் வேட்பாளராக சண்.ராமநாதன் போட்டி; துணை மேயர் பதவிக்கு அஞ்சுகம் பூபதி போட்டியிடுகிறார்.
  • நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பதவிக்கு மகேஷ் வேட்பாளராக அறிவிப்பு; துணை மேயர் பதவிக்கு மேரி பிரின்சி போட்டியிடுகிறார்.

Recent Posts

55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…

27 mins ago

நண்பேன்டா! சந்தானத்தை வைத்து கல்லா கட்ட ஆர்யா போட்ட பலே திட்டம்?

சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…

31 mins ago

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

49 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

52 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

52 mins ago

குற்றாலத்தில் வெள்ளம்..அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய மக்கள்!!

சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…

1 hour ago