“பரியேறும் பெருமாள்” பட இயக்குனருடன் கைக்கோர்க்கும் துருவ் விக்ரம்.!

நடிகர் துருவ் விக்ரம் அடுத்ததாக பரியேறு பெருமாள் படத்தினை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான ஆதித்யா வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் துருவ் விக்ரம் .ஆனால் அந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை .அதனை தொடர்ந்து துருவ் விக்ரம் தனது தந்தையுடன் இணைந்து நடிக்கவுள்ளதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் துருவ் விக்ரமுக்கு வில்லனாக விக்ரம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் துருவ் விக்ரம் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பிரபலமான மாரி செல்வராஜ் தற்போது தனுஷின் கர்ணன் படத்தை இயக்கி வருகிறார் . இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ள கர்ணன் படத்தினை தொடர்ந்து மாரி செல்வராஜ் துருவ் விக்ரமை வைத்து படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த படத்தினையும் பரியேறும் பெருமாள் படத்தினை தயாரித்த இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது .மாரி செல்வராஜ் கர்ணன் படத்தினையும் ,துருவ் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தினையும் முடித்து விட்டு மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் துருவ் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே பா.ரஞ்சித் அளித்த பேட்டியில் அடுத்த ஆண்டு விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் படத்தினை தயாரிக்க உள்ளதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Posts

சுட்டெரிக்கும் வெயில்…பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்.!

MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு…

27 mins ago

இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரி ரத்து செய்யப்பட்டது – பிரதமர் மோடி விமர்சனம்!

PM Modi: இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார் என பிரதமர் மோடி கூறிஉள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…

46 mins ago

தான்சானியாவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 155 பேர் பலி.!

East Africa: தான்சானியா நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 155 பேர் உயிரிழந்துள்ளனர், 236 பேர் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கனமழையைத்…

1 hour ago

13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்.!

Elections 2024: மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்டமாக கர்நாடகா, கேரளா,…

2 hours ago

13 மாநிலங்கள்… 89 தொகுதிகள்… இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு.!

Election2024 : மக்களவை 2ஆம் கட்ட தேர்தல் 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியாவில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல்…

3 hours ago

ஹைதராபாத் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி.. பெங்களூரு 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ..!

IPL2024: ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

10 hours ago