டெல்லி : புதிய சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாடு மையத்தின் திறப்பு விழாவில் பிரதமர் மோடி.!

டெல்லியில் பிரகதி மைதானத்தில் 123 ஏக்கர் பரப்பளவில் 2,700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தை இன்று பிரதமர் மோடி நாட்டுக்காக அர்ப்பணிக்க உள்ளார்.

இந்த கட்டட திறப்பு விழாவில் இன்று பிரதமர் மோடி கலந்துகொண்டுள்ளார். இந்த புதிய கட்டடத்தில் உலகெங்கிலும் உள்ள சிறந்த கண்காட்சி மற்றும் மாநாட்டு வளாகங்கள் அமைந்த ஒன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில், புதிய மாநாட்டு மையம், கண்காட்சி அரங்குகள், வட்ட வடிவில் திறந்தவெளி அரங்குகள் போன்ற பல அரங்குகள் அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.