கடும் பனிமூட்டத்தால் டெல்லியில் ரயில் சேவைகள் பாதிப்பு! பயணிகள் கடும் அவதி…….

டெல்லியில்  கடும் பனிமூட்டம் நிலவுவதால் சென்னைக்கு ரயில்கள் தாமதமாக வந்து சேர்ந்தன. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதின் ரயில் நிலையத்தில் இருந்து திங்கட்கிழமையன்று புறப்பட்ட திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று மாலை சென்னை எழும்பூருக்கு வரவேண்டிய நிலையில், பனி மூட்டம் காரணமாக நள்ளிரவு ஒரு மணியளவில் வந்தடைந்தது.
இதன் காரணமாக கன்னியாகுமரி செல்லும் பயணிகள் 7 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது செய்தியாளரிடம் பேசிய பயணிகள், ரயில் காலதாமதம் குறித்து அதிகாரிகள் உரிய பதிலளிக்கவில்லை குற்றம் சாட்டினார்.
போபாலில் இருந்து வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் காலதாமதத்தால் நாகர்கோவில் செல்லும் ரயிலை பிடிக்க முடியவில்லை எனவும் பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.டெல்லி மற்றும் வடமாநிலங்களில் நிலவும் பனிமூட்டத்தால் அங்கு ரயில்,விமானம்,சாலை போக்குவரத்து கடும் பாதிபடைந்துள்ளது….
source: dinasuvadu.com

Leave a Comment