RishabhPant [File Image]
Rishabh Pant : டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஒரு போட்டியில் விளையாட அபராதத்துடன் தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் நாளை (மே 12) பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் விளையாட பிசிசிஐ தடை விதித்துள்ளது. ஏனென்றால், ஏற்கனவே, 2 முறை டெல்லி மெதுவாக பந்துவீசியதற்கு அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து கடந்த 7-ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் மெதுவாக பந்துவீசியதற்கும் (slow over-rate) அபராதம் விதிக்கப்பட்டது.
2 முறை அபராதம் விதிக்கப்பட்டும் மூன்றாவது முறையாகவும் மெதுவாக பந்துவீசியதன் காரணத்தால் ரிஷப் பண்ட்க்கு 30 லட்சம் அபராதம் மற்றும் ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் போட்டிக்கு முன்னதாக, கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி மெதுவாக பந்துவீசிய குற்றத்திற்காக கேப்டன் ரிஷப் பண்ட்க்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
அதற்கு முன், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட்க்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. நாளை பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் இல்லாதது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் டெல்லி அணி பிளே ஆப்சுற்றுக்கு தகுதி பெறவில்லை.
இந்த சீசனில், 12 போட்டிகள் விளையாடி 6 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளி விவரப்பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கிறது. அடுத்ததாக நடைபெறும் இரண்டு போட்டிகளும் டெல்லி அணிக்கு முக்கியமான போட்டி எனவே, இப்படியான முக்கியமான போட்டியில் ரிஷப் பண்ட் இல்லை என்பதால் அணியை எந்த வீரர் வழிநடத்த போகிறார் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.
UK தேர்தல்: புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீர் ஸ்டார்மர் தனது முதல் உரையில் பேசினார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்…
Fenugreek tea-இன்றும் பலருக்கு காலை உணவாக இருப்பது டீ தான். அது மட்டுமல்லாமல் ட்ரெஸ்ஸில் இருந்து பலருக்கும் விடுதலை தருவதும் டீ தான் .இந்த பால் மற்றும்…
சுரேஷ் ரெய்னா : இந்திய அணியின் கிரிக்கெட் ஜெர்ஸி எண் '7' -க்கு பிசிசிஐ ஓய்வை அறிவித்தனர், அதே போல '45'& '18' என்ற ஜெர்ஸி எண்ணிற்கும்…
உத்தரபிரதேசம் : எதிர்பாராமல் நடக்கும் விபத்து சம்பவங்களில் சிலர் பலியாகும் செய்திகளை பார்த்தோம் என்றாலே நமக்கு வேதனையாகிவிடும். அப்படி தான் உத்தரபிரதேசம்ஹர்தோய் மாவட்டத்தில், பெட்ரோல் பங்கில் நின்று கொண்டிருந்த…
குஜராத் : குஜராத் அரசு, அம்மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தியுள்ளது. முதல்வர் பூபேந்திர படேலின் அலுவலகத்தின்படி, ஏழாவது ஊதியக் குழுவின் கீழ்…
இந்திய கடற்படை 2024 : இந்தியக் கடற்படை (Indian Navy) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 10+2 (B.Tech) கேடட் நுழைவுத் திட்டம் (நிரந்தர கமிஷன்) பணியிடங்களுக்கான விரிவான…