செங்கோட்டை கலவர வழக்கில் நடிகர் தீப் சித்துவுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த ஜனவரி 26-ஆம் தேதி அன்று நடத்திய டிராக்டர் அணிவகுப்பின் போது செங்கோட்டை மற்றும் டெல்லிக்குள் வன்முறை ஏற்பட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட நடிகர் தீப் சித்துவுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது என்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, தீப் சித்து தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என தெரிவித்தார். சித்துவுக்கு ரூ30,000 பத்திரத்தில் ஜாமீன் வழங்கி, நீதிமன்றம் சில நிபந்தனையையும் வழங்கியுள்ளது.
தீப் சித்து காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் உங்கள் தொலைபேசியை 24 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். உங்கள் இருப்பிடம் பற்றிய தகவல்கள் விசாரணை அதிகாரிக்கு வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா…
Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…
Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…
Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …
Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…
Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…