david miller [file image]
உலகக்கோப்பை 2024 டி20 : இறுதிப்போட்டியில் இந்திய அணியும், தென்னாபிரிக்கா அணியும் மோதியநிலையில் , இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. போட்டி முடிந்த பிறகு இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா போன்ற வீரர்கள் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்கள்.
அந்த வகையில், இதயத்தை உடைக்கும் தோல்விக்குப் பிறகு, டேவிட் மில்லர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததாக சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. டேவிட் மில்லருக்கு வயது 35 பல வருடங்களாக கிரிக்கெட் விளையாடி கொண்டு இருக்கிறார் எனவே, அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்த தகவல் உண்மை என பலரும் நினைத்தார்கள்.
இந்த நிலையில், ஓய்வு பெறவில்லை என டேவிட் மில்லர் தனது இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் இது பற்றி கூறியதாவது ” நான் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை பெறுவதாக அறிக்கைகள் வெளியாகி இருக்கிறது. ஆனால், நான் ஓய்வு அறிவிக்கவில்லை. இன்னும் தொடர்ந்து எங்களுடைய தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடுவேன். என்கிட்ட இருந்து இனிமேல் தான் சிறந்த ஆட்டம் வரப்போகிறது” எனவும் கூறியுள்ளார்.
ஓய்வு பெறவில்லை என மில்லர் விளக்கம் கொடுத்த நிலையில், ரசிகர்கள் பலரும் உற்சாகத்துடன் அடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாடுங்கள் என வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும், டேவிட் மில்லர் இதுவரை 125 டி20 போட்டிகளில் விளையாடி 2,439 ரன்கள் எடுத்துள்ளார், அவரது அதிகபட்ச ஸ்கோர் 106 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
UK தேர்தல்: புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீர் ஸ்டார்மர் தனது முதல் உரையில் பேசினார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்…
Fenugreek tea-இன்றும் பலருக்கு காலை உணவாக இருப்பது டீ தான். அது மட்டுமல்லாமல் ட்ரெஸ்ஸில் இருந்து பலருக்கும் விடுதலை தருவதும் டீ தான் .இந்த பால் மற்றும்…
சுரேஷ் ரெய்னா : இந்திய அணியின் கிரிக்கெட் ஜெர்ஸி எண் '7' -க்கு பிசிசிஐ ஓய்வை அறிவித்தனர், அதே போல '45'& '18' என்ற ஜெர்ஸி எண்ணிற்கும்…
உத்தரபிரதேசம் : எதிர்பாராமல் நடக்கும் விபத்து சம்பவங்களில் சிலர் பலியாகும் செய்திகளை பார்த்தோம் என்றாலே நமக்கு வேதனையாகிவிடும். அப்படி தான் உத்தரபிரதேசம்ஹர்தோய் மாவட்டத்தில், பெட்ரோல் பங்கில் நின்று கொண்டிருந்த…
குஜராத் : குஜராத் அரசு, அம்மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தியுள்ளது. முதல்வர் பூபேந்திர படேலின் அலுவலகத்தின்படி, ஏழாவது ஊதியக் குழுவின் கீழ்…
இந்திய கடற்படை 2024 : இந்தியக் கடற்படை (Indian Navy) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 10+2 (B.Tech) கேடட் நுழைவுத் திட்டம் (நிரந்தர கமிஷன்) பணியிடங்களுக்கான விரிவான…