கொரோனாவால் உயிரிழந்த காவல் ஆய்வாளர்! 21 குண்டுகள் முழங்க அஞ்சலி!

கொரோனாவால் உயிரிழந்த காவல் ஆய்வாளர்க்கு, 21 குண்டுகள் முழங்க அஞ்சலி.

இந்தியா முழுவதும் கொரோனா வைராஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் பொது மக்கள் மட்டுமல்லாது, மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் அதிகாரிகளும் தான் பாதிக்கப்படுகின்றனர். 

 இந்நிலையில், சென்னை மாம்பலம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளராகப் பணியாற்றியவர் பாலமுரளி. இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் கடந்த 5-ம் தேதி தனிமைப்படுத்தப்பட்டார்.

 இதனையடுத்து, அவருக்கு காய்ச்சல் அதிமான நிலையில், கடந்த 7-ம் தேதி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில், இவரது உடல், கண்ணம்மாப்பேட்டை இடுகாட்டிற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அங்கு காவல்துறை சார்பில் அவருக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி அடக்கம் செய்யப்பட்டது.