கர்நாடகாவில் ஓமைக்ரான் பாதித்த இருவருடன் தொடரில் இருந்த 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஓமிக்ரான் கொரோனா சில நாட்களில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் ஓமைக்ரான் கொரோனா 2 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த 66 மற்றும் 46 வயதான ஆண்கள் இருவருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இருவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் ஓமைக்ரான் பாதித்த இருவருடன் தொடரில் இருந்த 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட 5 நபர்களின் மாதிரிகள் ஓமைக்ரான் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே மொத்தம் 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் யாரும் தீவிரமான அறிகுறிகளைக் காட்டவில்லை. இவர்கள் அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே சுதாகார் தெரிவித்தார். ஏற்கனவே 23 நாடுகளில் ஓமைக்ரான் பரவ துவங்கிய நிலையில், தற்போது இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…