பஞ்சாபில் 23 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு நடத்த உத்தரவிட்டதை அடுத்து, அதற்கு தடை கோரி மனு தாக்கல் செய்தனர். ஆனால், அதனை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் நேற்றைய தினம் எதிர்கட்சிகளை சேர்ந்த மாநில முதல் மந்திரிகளின் ஆலோசனை கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது.
அப்போது, பேசிய பஞ்சாப் முதல் மந்திரியான அமரீந்தர் சிங், கொரோனா சூழலில் நுழைவுத் தேர்வு நடத்துவதன் மூலம் பல லட்சக்கணக்கான மாணவர்களுக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும், எனவே தேர்வை நிறுத்தி வைக்க கோரி சுப்ரீம் கோர்டில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறினார். மேலும் பஞ்சாபில் சட்டசபை கூட்டத் தொடருக்கு 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இதுவரை 23 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மந்திரி மற்றும் அமைச்சர்களுக்கே இந்த நிலைமை எனில், நிலைமை எப்படி என்று நீங்கள் யோசித்து பார்க்க வேண்டும் என்று கூறினார். எனவே, இந்த இக்கட்டான சூழலில் மாணவர்கள் தேர்வு மையத்திற்கு சென்று தேர்வு எழுத முடியாது என்று அமரீந்தர் சிங் கூறியுள்ளார்.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…