21 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் அழைப்பு…!

இந்திய ஒற்றுமை பயணத்தின் நிறைவு விழாவில் கலந்துகொள்ள திமுக உள்ளிட்ட ஒருமித்த கருத்து கொண்ட 21 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் அழைப்பு.

இந்திய ஒற்றுமை பயணத்தின் நிறைவு விழா ஸ்ரீநகரில் வரும் 30-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள திமுக உள்ளிட்ட ஒருமித்த கருத்து கொண்ட 21 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.

அந்த அழைப்பில், ஸ்ரீநகரில் 30-ஆம் தேதி நடக்கும் நிறைவிழாவுக்கு வருமாறு உங்களுக்கு அழைப்பு விடுகிறேன். வெறுப்பு வன்முறைக்கு எதிராக இடைவிடாமல் போராடி உயிர் நீத்த காந்தி நினைவு நாளில் நடக்கும் நிகழ்ச்சியை காந்தியின் நினைவுகளுக்கு அர்ப்பணிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment