சூரப்பா குறித்து புகார்கள் தொடர்ச்சியாக எழுந்த நிலையில், சூரப்பாவிடம் விரைவில் நேரில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் செய்ததாக புகார்கள் எழுந்தன.அவர் மீது இது குறித்து புகார்கள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டது.எனவே சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக்குழுவை அமைத்தது தமிழக அரசு .மேலும் மூன்று மாதங்களில் இந்த விசாரணைக்குழு அறிக்கை அளிக்கவும் அரசு உத்தரவிட்டது.சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க விசாரணை ஆணைய நீதிபதி கலையரசன் பொறுப்பேற்றார்.
இது தொடர்பாக நீதிபதி கலையரசன் கூறுகையில்,அடுத்த வாரம் துணை வேந்தர் சூரப்பா மீது ஊழல் புகார் தெரிவித்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் எனக்கூறியுள்ளார்.பின்பு தனித்தனியாக அவர்களிடம் விசாரணை நடத்தப்படும்.புகாரின் பேரிலே சூரப்பா மீதான அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.மேலும் இவ்விவகாரம் தொடர்பாக இன்று முதல் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என்று கூறினார்.
அதன்படி மின்னஞ்சலில் சூரப்பா மீது புகார்கள் வந்துள்ளதாக விசாரணை குழு தெரிவித்துள்ளது.மின்னஞ்சல் புகார்கள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் புகார்கள் மீது முகாந்திரம் இருந்தால் புகார் கொடுத்தவர்களை நேரில் வரவழைத்து விளக்கம் கேட்கப்படும் என்றும் விசாரணை குழு கூறியுள்ளது. மேலும் துணை வேந்தர் சூரப்பாவிடம் விரைவில் நேரில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார்.
Pinarayi Vijayan: கேரளாவின் கண்ணூர் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…
Election2024: வெறுப்பு அரசியலுக்கு எதிராக நான் வாக்களித்து உள்ளேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் வாக்குப்பதிவு இன்று 7 மணி முதல்…
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதிகிறது. ஐபிஎல்லின் 17-வது தொடரின் 42-வது போட்டியாக இன்றைய நாளில் கொல்கத்தா நைட்…
MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு…
PM Modi: இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார் என பிரதமர் மோடி கூறிஉள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…
East Africa: தான்சானியா நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 155 பேர் உயிரிழந்துள்ளனர், 236 பேர் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கனமழையைத்…