சண்முகநாதனின் உடலுக்கு நேரில் சென்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சண்முகநாதனின் உடலுக்கு நேரில் சென்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின். 

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் உதவியாளர் கோ. சண்முகநாதன்  உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சற்று முன் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இரங்கல் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தற்போது சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துகிறார். அவருடன், உதயநிதி ஸ்டாப்களின், வைகோ, அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், சண்முகநாதனின் உடல் நாளை தகனம் செய்யப்படவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.