கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார்.
கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்றும், நாளையும் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு கள ஆய்வு செய்ய உள்ளார்.
இந்நிலையில், இன்று விழுப்புரம் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்ய நேரில் வருகை தர இருக்கிறார். அரசின் திட்டங்கள், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து இன்று விழுப்புரத்திலும், நாளை 27ம் தேதி கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
மேலும், விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை காவல்துறை அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ஆய்வுகளுடன் விவசாய சங்க பிரதிநிதிகளுடனும் பேசுகிறார்.
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…
சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…
சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…
Plank exersize-பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…
சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…
சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…