Dubai: துபாயில் பெய்த கனமழையால் சென்னையில் இருந்து செல்லும் எமிரேட்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கனமழையால் வளைகுடா நாடுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. துபாயின் சில பகுதிகளில் ஓராண்டுக்கும் அதிகமான மழை ஒரே நாளில் பெய்துள்ளது. இதனால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த வெள்ளத்தால் துபாயில் ஒருவர் உயிரிழந்ததாக ராய்ட்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது. அதே போல அண்டை நாடான ஓமனில் 18 பேர் உயிரிழந்தனர்.
துபாய் சர்வதேச விமான நிலையத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றைய தினத்தை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் 2வது நாளாக விமான சேவை ரத்து செய்யப்பட்டள்ளது.
இரண்டாம் நாளாக இன்று சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது தொடர்பாக எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
ஆம், துபாய் செல்ல வந்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிறுவன அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக பயணிகள் குற்றச்சாட்டை முன்வைத்து விமான நிறுவன கவுன்டரில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…