விழுப்புரம் விஷ சாராய உயிரிழப்பு விவகாரத்தில் கெமிக்கல் தொழிற்சாலை உரிமையாளர் சென்னையில் கைது செய்யப்பட்டள்ளார்.
தமிழகத்தையே உலுக்கி வரும் விஷ சாராய சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி அடுத்தடுத்த கைது சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விஷ சாராயம் குடித்து இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டில் போலி மதுபானம் குடித்து 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
விழுப்புரத்தில் உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் குடித்தது மனிதர்கள் காய்ச்சும் கள்ளச்சாராயம் இல்லை என்றும், அது கெமிக்கல் தொழிற்சாலையில் வாங்கப்படும் மெத்தனால் எனும் விஷ சாராயம் என்பதும் தடவியல் சோதனையில் தெரியவந்ததாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்து இருந்தார். மேலும் இந்த விஷ சாராயம் அங்கு எப்படி விற்பனை செய்யப்பட்டது என வேலு மற்றும் பனையூர் ராஜேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் அவர்களிடம் நடத்திய விசாரணையில், நேற்று சென்னை மதுரவாயல் பகுதியில்கெமிக்கல் தொழிற்சாலை நடத்தி வரும் இளையநம்பி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து தான் 1000 லிட்டர் மெத்தனால் வாங்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது இளையநம்பியிடம் , மெத்தனால் எங்கு யாருக்கெல்லாம் விற்பனை செய்யப்பட்டது என்ற விவரம் பற்றி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…