பிரதமர் மோடி ஆட்சிக்கு பிறகு குடும்ப அரசியலுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.! பாஜக தலைவர் நட்டா பேச்சு.!

பிரதமர் மோடி ஆட்சி அமைந்த பிறகு சாதி, குடும்ப அரசியலுக்கு இந்தியாவில் முடிவு கட்டப்பட்டுள்ளது. – பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா பேச்சு. 

கர்நாடக மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால், அம்மாநிலத்தில் பிரதான கட்சிகள் தேர்தல் வேலைகளை முடிக்கிவிட்டுள்ளனர்.

அந்த வகையில், பாஜக தேசிய தலைவர் ஜேபி. நட்டா கர்நாடகாவில் தேர்தல் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,  பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் இந்தியா பலமிக்கதாகவும், உறுதியான பொருளாதாரம் உள்ள நாடாக  இந்தியா திகழ்கிறது. பிரதமர் மோடி ஆட்சி அமைந்த பிறகு சாதி, குடும்ப அரசியலுக்கு இந்தியாவில் முடிவு கட்டப்பட்டுள்ளது. என குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய போன்ற பெரும் நாடுகள் கொரோனாவால் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. நாட்டில் அரசியல் கலாச்சாரம் தற்போது முற்றிலும் மாறியுள்ளது. சாதி ரீதியிலான விஷயங்களுக்கு இந்தியாவில் முடிவு கட்ட வேண்டும். எனவும் அந்த நிகழ்வில்  பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார்.

Leave a Comment