பெண் சிசு கொலைகளை தடுக்க வேண்டும். இதனால் இப்பொது எங்களுக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை என மகாராஷ்டிரா மாநிலத்தில் இளைஞர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
காலங்கள் மாறி, நவீன உலகம் நம் கையில் தவழ்ந்தாலும், இன்னும் சில பழமையான கொடூர சம்பவங்கள் போதிய விழிப்புணர்வின்றி தொடர்ந்து கொண்டு இருப்பது தான் இங்கு சோகமான ஒன்று.
அப்படி நடைபெற்ற கொடூரம் தான் பெண் சிசு கொலை. இதன் காரணமாக தற்போது ஆண்கள் தங்களுக்கு சரியான துணை கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். இதனால் ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் திருமணத்திற்கு பெண் கிடைக்காத ஆண்கள் மாப்பிள்ளை போல அலங்கரித்து கொண்டு பேரணியாக மாவட்ட கலெக்டரிடம் சென்று திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை என மனு கொடுத்துள்ளனர்.
அதில் அவர்கள் முக்கியமாக குறிப்பிட்ட விஷயம் என்னவென்றால் , அந்த பகுதியில் கருவுற்ற பெண்ணின் வயிற்றில் இருப்பது ஆணா பெண்ணா என சட்டவிரோதமாக குழந்தையின் பாலினத்தை கண்டறிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பெண் சிசு கொலையால் தற்போது மஹாராஷ்டிரா மாநிலத்தில் 1000 ஆண்களுக்கு 889 பெண்கள் மட்டுமே உள்ளனர் என்பது நமக்கு கிடைத்த கூடுதல் தகவல்.
IPL2024: கொல்கத்தா அணி 13.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 8 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல்…
சென்னை: ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போதயை நடைமுறையின்படி, ஒரு தனிநபர் ஒட்டுநர் உரிமம் பெற வேண்டும்…
சென்னை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயலாற்ற, இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் விருப்பம்…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமாவில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்ற விஷயங்களில் ஒன்று என்னவென்றால் பழைய…
சென்னை : வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ள கோப்பா அமெரிக்கா தொடரிலும் அதற்கு முன் அர்ஜென்டினா அணி விளையாடவுள்ள நட்புரீதியான போட்டிகளிலும் (Friendly Match) லியோனல் மெஸ்ஸி…
குரு பகவான் -குரு பகவானின் அருள் கிடைக்க செய்ய வேண்டியவை என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இந்து சமய வழிபாட்டில் பல்வேறு வழிபாடுகள் உள்ளது. அதில் நவகிரக…