#Breaking:சுனந்தா புஷ்கர் மரண வழக்கு – முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் விடுவிப்பு..!

சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரை விடுவித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு காங்கிரஸ் எம்பி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர்,டெல்லி நட்சத்திர விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.இதுகுறித்து,பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில் அடுத்தடுத்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில்,பல்வேறு தீவிர விசாரணைக்கு பிறகு சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரை விடுவித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.