#Breaking:ஆன்லைன் சூதாட்டம் – சட்ட குழுவுக்கு தமிழக அரசு போட்ட அவசர உத்தரவு!

ஆன்லைன் ரம்மியால் பலரும் பணம் இழந்து தற்கொலை செய்து கொண்டு வரும் நிலையில்,தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்தவற்கு அவசர சட்டத்தை உருவாக்க சிறப்பு சட்ட குழுவை அமைத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து முதல்வர் ஆணையிட்டுள்ளார்.மேலும், இந்த குழுவில், ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் சங்கரராமன்,ஸ்நேஹா அமைப்பின் நிறுவனர் லட்சுமி விஜயகுமார் இடம்பெற்றுள்ளனர்.

தமிழக அரசின் குழுவில் காவல்துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடேவும் இடம்பெற்றுள்ளார்.இந்த குழுவின் அறிக்கை அடிப்படையில் ஆன்லைன் ரம்மிக்கு அவசர சட்ட விரைவில் இயற்றப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,ஆன்லைன் சூதாட்டம் குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மேலும்,ஆன்லைன் விளையாட்டுக்கள் உண்மையிலேயே திறன்களை வளர்க்கிறதா? அல்லது அடிமையாக்குகிறதா?,நிதி இழப்பு ஏற்படுகிறதா?, குறிப்பாக தற்கொலைக்கு தூண்டுகிறதா? என்பது குறித்தும் ஆராய வேண்டும்,இது தொடர்பான அறிக்கையை இரு வாரத்திற்குள் சமர்பிக்க வேண்டும் எனவும் இக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

Leave a Comment