#Breaking: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு 5 ஆக உயர்வு.!

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவின் மும்பையில் கொரோனா பாதிப்பால் 63 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஏற்கனவே இந்தியாவில் 4  பேர் உயிரிழந்த நிலையில், தற்போது 5 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் பரவி நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது. அதில் 23 பேர் வைரஸிலிருந்து குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.