திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இட ஒதுக்கீடு பெற ஏதுவாக இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 3 ஆம் பாலினத்தவர்களான திருநங்கைகளை சேர்க்க மத்திய சமூக நீதித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி,மத்திய சமூக நீதித்துறை ஓபிசி பட்டியலில் திருநங்கைகளை சேர்ப்பதற்கான வரைவு அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.
கல்வி,வேலைவாய்ப்பில் ஓபிசி பிரிவினருக்கான 27% இட ஒதுக்கீட்டின்கீழ் திருநங்கைகள் பயனடையும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து,இந்த அறிக்கையின் மீது மத்திய அரசு முடிவு எடுத்து அதற்கான ஒப்புதல் அளித்து,பின்னர் அதனை நாடாளுமன்றத்திற்குஅனுப்பி வைப்பார்கள்.நாடாளுமன்றத்தில் அது சட்ட திருத்தமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்படும்.
3 ஆம் பாலினத்தவரை சம அளவில்,சம அந்தஸ்த்தில் மதிக்க வேண்டும் என முன்னதாக உச்சநீதிமன்றம் கூறிய நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
IPL2024: லக்னோ அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…
சென்னை : டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். டெல்லியில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்தில் சி.ஆர் கட்டிடத்தில் இன்று பிற்பகல் 3…
சென்னை : ஐபிஎல் தொடரின் குஜராத் அணியின் கேப்டனான சுப்மன் கில்லை அணியில் இருப்பவர்கள் நம்ப வேண்டும் என ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய போது கூறி இருந்தார்.…
சென்னை : தளபதி 69 படத்தில் நடிக்க விஜய் கேட்ட சம்பளத்தை கேட்டு ஆர்ஆர்ஆர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியடைந்துள்ளது. நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு…
சென்னை: ரஃபாவில் ஐக்கிய நாடுகள் சபையின் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி உயிரிழந்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புத் துறையில் பணிபுரியும் முன்னாள்…
சென்னை : பிரதமர் மோடியின் சொத்துமதிப்பு 3.02 கோடி ரூபாய் என தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல். 2014 மற்றும் 2019 வெற்றியை தொடர்ந்து மீண்டும் வாரணாசி…