தேசிய குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற வாலிபர் வழிப்பறி வழக்கில் கைது…

தேசிய குத்துச்சண்டை போட்டியில், தங்கம் வென்ற வாலிபர் உட்பட மூன்றுபேரை, வழிப்பறி வழக்கில், திண்டுக்கல் காவல்துறையினர் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடை ரோடு நிலக்கோட்டை அருகே வத்தலகுண்டில் இருசக்கர வாகன ஓட்டிகளிடம், அடிக்கடி வழிப்பறிகள் நடந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து இது தொடர்பாக, அரசராஜன், (19) கதிரேசபிரபு, (20),  மற்றும் தேசிய குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற, பாலமுருகன், 22, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதி, பி.எஸ்சி., பட்டதாரியான பாலமுருகன், மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் பெற்றோருடன் வசித்து வந்தார். இரு ஆண்டுகளுக்கு முன், தேசிய குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றவர், கொரோனா அதிகமானதால், சொந்த ஊரான குல்லிசெட்டிபட்டிக்கு வந்து தங்கினார்.
கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான கதிரேசபிரபு, அரசராஜனுடன் சேர்ந்து, வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறையினர்  கூறுகையில், ‘திண்டுக்கல்லில், பாலமுருகன் திருடிய இருசக்கர வாகனத்தை, இரண்டு நாட்களில், நாக்பூருக்கு ஓட்டிச் சென்று மறைத்து வைத்தார். விமானத்தில் திரும்பி வந்து, வழிப்பறியை தொடர்ந்தார்.’இவர்களிடம் இருந்து  மூன்று அலைபேசிகள், 2 சவரன் நகை மற்றும் இருசக்கர வாகனம் அகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கும்பலை சேர்ந்த மேலும் இருவரை தேடி வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

Kaliraj

Recent Posts

ஹரி இஸ் பேக்! தெறிக்கும் ரத்னம் படத்தின் ட்விட்டர் விமர்சனம்!

Rathnam : விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள ரத்னம் படத்தின் ட்வீட்டர் விமர்சனம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ரத்னம் திரைப்படம்…

5 mins ago

JAM 20024 : ஐஐடியில் முதுகலை படிப்புகள்… விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு.!

IIT JAM 2024 : ஐஐடியில் முதுகலை படிப்புகள் படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 29ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியவில் மிகவும்…

9 mins ago

இழப்பைச் சந்தித்த டெக் மஹிந்திரா…6000 பேருக்கு வேலை? நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு.!

Tech Mahindra: ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா நிறுவனம் இந்த ஆண்டு, 6000 இளைஞர்களை புதியதாக பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது. நாட்டின் ஐந்தாவது பெரிய தகவல்…

43 mins ago

மக்களவை தேர்தல் – 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம் என்ன?

Election2024: இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் காலை 11 மணி வரை திரிபுராவில் அதிகபட்சமாக 36.42% வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல். மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட…

43 mins ago

தூங்கிக்கொண்டு இருந்த வாட்ச்மேன்! கேட் ஏறி விஜயகாந்த் செஞ்ச விஷயம்?

Vijayakanth : வாட்ச் மேன் தூங்கிக்கொண்டு இருந்தபோது விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கேப்டன் விஜயகாந்த் சாப்பாடு போட்டு உதவி செய்வது பலருக்கும்…

1 hour ago

வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு வழக்கு… உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்.!

VVPAT Case : 100% தேர்தல் ஒப்புகை சீட்டு சரிபார்ப்பு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்களை இதில் காணலாம். தேர்தல் வாக்குப்பதிவின் போது, EVM மிஷினில்…

1 hour ago