ஈபிள் டவருக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பிரான்சில் உள்ள பிரபலமான ஈபிள் டவரில் வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று காவல்துறையினருக்கு வந்த தொலைப்பேசியில் பேசிய மர்ம நபர் ஒருவர், ஈபிள் டவரின் கீழே வெடிகுண்டு வைத்துள்ளதாக அச்சுறுத்தியுள்ளார். இதனையடுத்து, அப்பகுதியில் இருந்த சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்ட அப்பகுதி முழுவதையும் காவல்துறையினர் கண்காணித்து வந்தனர்.
அந்த வகையில், ஈபிள் டவரில் தீவிர நடவடிக்கைளில் ஈடுபட்டு வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று போலீஸ் தெரிவித்தார். இதன் பின் நேற்று பிற்பகல் முதல் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் திறக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு முன்பு, ஈபிள் கோபுரத்தை ஒரு நாளைக்கு 25,000 க்கும் மேற்பட்ட மக்கள் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு காரணமாக பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…