Categories: Uncategory

விவசாயிகள் மாநாடு பேரணியுடன் நிறைவு

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில 29-வது மாநாடு பேரணி பொதுக்கூட்டத்துடன் செவ்வாயன்று கம்பத்தில் நிறைவு பெற்றது.மாநாட்டில் 88 பேர்கள் கொண்ட மாநிலக்குழு தேர்வுசெய்யப் பட்டது. மாநிலத்தலைவராக கே.பாலகிருஷ்ணன், பொதுச்செயலாளராக பெ.சண்முகம், பொருளாளராக கே.பி.பெருமாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். துணைத்தலைவர்களாக டி.ரவீந்திரன், கே.முகமதலி,வி.சுப்பிரமணி, ஜி.சுந்தரமூர்த்தி, ஆர்.செல்லசுவாமி, ஏ.நாகப்பன், ஏ.எம்.முனுசாமி, எஸ்.ஆர்.மதுசூதனன் ஆகியோரும் துணைச்செயலாளர்களாக ஏ.விஜயமுருகன்,பி.டில்லிபாபு,சாமி நடராஜன், ஸ்டாலின் மணி, டி.கண்ணன், ஆர்.சச்சிதானந்தம்,ஜி.மாதவன்,துளசி நாராயணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.பின்னர் நடைபெற்ற பேரணியை அகில இந்திய இணைச் செயலாளர் விஜூ கிருஷ்ணன் துவக்கி வைத்தார். செண்டை மேளம் ஒலிக்க அதிர்வேட்டுகள் முழங்க பேரணி புறப்பட்டது. 29 செங்குடைகள், 29 செங்கொடிகள் பேரணியில் அணிவகுத்தன. பேரணியை தமிழக விவசாயிகள் சங்கத்தின் தேனி மாவட்டச் செயலாளர் திருமலைக்கொழுந்து தலைமையிலும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை தலைமையிலும் வாழ்த்து முழக்கம் எழுப்பி வரவேற்றனர்.

கம்பம் காந்திநகரிலிருந்து துவங்கிய பேரணி நகராட்சி அலுவலகம், நாட்டுக்கல், கம்பம் மெட்டுச்சாலை, எல்எப் சாலை, வேலப்பர் கோவில் வழியாக வ.உ.சி. திடலை வந்தடைந்தது. பேரணியின் முடிவில் ஜி.எம்.நாகராஜன் வரவேற்புரையோடு துவங்கிய பொதுக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத்தலைவர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா, அகிலஇந்திய துணைத் தலைவர் கே.வரதராசன், அகில இந்தியஇணைச் செயலாளர் விஜூ கிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம், மாநிலதுணைத்தலைவர் டி.ரவீந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.

விவசாயிகள் சங்கத்தின் தேனி மாவட்டத் தலைவர் கே.தயாளன் நன்றி கூறினார்.பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து உழவர் கலை விழா நடைபெற்றது. புதுகை பூபாளம். கரிசல் கருணாநிதி, செம்மலர் கலைக்குழு ஆகியோரின் கலை நிகழ்வுகளும் செவக்காட்டு நாடகக்குழுவின் நாடகங்களும் இடம் பெற்றன.பன்முக கலைஞர் பாரதி கிருஷ்ணகுமார், சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

Castro Murugan

Recent Posts

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !! டெல்லி – மும்பை இன்று மோதல் !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், மும்பை அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 43- வது போட்டியாக டெல்லி…

9 mins ago

பிரம்ம முகூர்த்தத்தின் ரகசியம் தெரிஞ்சா..இந்த நேரத்தை மிஸ் பண்ண மாட்டீங்க .!

பிரம்ம முகூர்த்தம்- பிரம்ம முகூர்த்த நேரத்தின் ரகசியம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ? பிரம்மன் தான் இந்த பிரபஞ்சத்தை…

1 hour ago

IPL2024: வரலாறு சாதனை… சிக்ஸர் மழையால் பஞ்சாப் அபார வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…

8 hours ago

‘இந்த விதியை சேர்த்தது .. ரொம்பவே முக்கியம் தான்’ !!சிஎஸ்கே அணியின் கான்வே ஓபன் டாக் !!

Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…

11 hours ago

பேட் ரூம் காட்சியில் படு கிளாமராக நடித்த பிரியா ஆனந்த்! அதுவும் அந்த புது படத்திலா?

Priya Anand : நடிகை பிரியா ஆனந்த்  படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…

11 hours ago

காமெடி வேற லெவல்! சிரிக்க வைக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ டிரைலர்!

Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…

12 hours ago