#BREAKING: திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த பாஜக எம்.பி மனைவி..!

அடுத்த ஆண்டு மேற்கு வங்கத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மாநிலத்தில் அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், பாஜக எம்.பி. சௌமிட்ரா கானின் மனைவி சுஜாதா மண்டல் கான் இன்று திரிணாமுல் காங்கிரஸில் சேர்ந்தார். நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் சுவேந்து ஆதிகாரி திரிணாமுல் காங்கிரஸ் விட்டு பாஜகவில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரிணாமுல் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் முன்னிலையில் சுஜாதா மண்டல் கான் கட்சியில் இணைந்தார். திரிணாமுல் காங்கிரஸில் சேர்ந்த பிறகுபேசிய  சுஜாதா, மாநிலத்தில் கட்சியை வளர்க்க நான் பணியாற்றுவேன், ஆனால் இப்போது பாஜகவில் மரியாதை இல்லை.பாஜக திரிணாமுலில் இருந்து அரசியல்வாதிகளை ஊழல் செய்து தனது சொந்த கட்சியை உருவாக்க முயற்சிக்கிறது.

மாநிலத்தில் பாஜகவின் முதல்வர் முகம் இல்லை. மம்தா பானர்ஜிக்கு வேலை செய்வது ஒரு பெண்ணாக எனக்கு கவுரவமாக இருக்கும் என்று நினைக்கிறேன் என  தெரிவித்தார்.