பீகார் மாநில முதல்வரான நிதீஷ் குமார் இதுவே தனது கடைசி தேர்தல் என்று தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட வாக்குபதிவில் 55.69% வாக்குகளும், செவ்வாயன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குபதிவில் 55.70% வாக்குகளும் பதிவாகியிருந்தது . இதனை தொடர்ந்து மீதமுள்ள 78 இடங்களுக்கான மூன்றாம் கட்ட வாக்குபதிவு நாளை நடைபெறவுள்ளது.
இதற்கான, பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்ததை தொடர்ந்து, பீகார் முதல்வர் நிதீஷ் குமார் நேற்று புர்னியா பகுதியில் கடைசியாக நடந்த பிரச்சாரத்தில் பேசிய போது, நடப்பு தேர்தலே தனது கடைசி தேர்தல் என்றும், எனவே இந்த தேர்தலில் மக்கள் அனைவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக வாக்குகளை அளித்து இந்தாண்டும் தங்களை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்றும், இன்றுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைவதாகவும் பீகார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா கட்சி தலைவருமான நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இவர் 15 வருடங்களாக பீகார் மாநில முதல்வராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.அதனாலையே அவரது இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து பல கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துக்களை கூறி வரும் நிலையில், நிதிஷ் குமார் அவர்களின் காலம் முடிந்து விட்டதாக லோக் ஜன்சக்தி கட்சி தலைவரான அஜய் குமாரும், தனது கடைசி தேர்தல் இதுதான் என்று அறிவித்ததற்கு நன்றி என்றும், அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது நல்லது என்று கூறி தன்னை ஆசீர்வதிக்குமாறு ராஷ்டிரிய லோக் சம்தா கட்சி தலைவரான உபேந்திரா குஷ்வாஹாவும் கூறியுள்ளார். நாளை நடைபெறும் மூன்றாம் கட்ட வாக்குபதிவுக்கான முடிவுகள் வரும் 9-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Vijayakanth : வாட்ச் மேன் தூங்கிக்கொண்டு இருந்தபோது விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கேப்டன் விஜயகாந்த் சாப்பாடு போட்டு உதவி செய்வது பலருக்கும்…
VVPAT Case : 100% தேர்தல் ஒப்புகை சீட்டு சரிபார்ப்பு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்களை இதில் காணலாம். தேர்தல் வாக்குப்பதிவின் போது, EVM மிஷினில்…
China: சீனா தனக்கென சொந்தமாக உருவாக்கியுள்ள விண்வெளி நிலையத்திற்கு 3 விண்வெளி வீரர்களை 6 மாத பணிக்காக அனுப்பியுள்ளது. விண்வெளியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக ரஷ்யா உட்பட உலக…
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி…
Ghilli : கில்லி படத்தில் ரஜினியின் ஒரு படத்தின் கதாபாத்திரத்தை பார்த்து தான் விஜய் நடித்தார் என தரணி கூறியுள்ளார். நடிகர் விஜயின் சினிமா கேரியரில் பல…
Chess Championship 2024 : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தேவ் படேல் தெரிவித்து இருக்கிறார். கனடாவில் டொராண்டோ நகரில் நடத்தப்பட்ட பிடே…