வாட்ஸ்-அப்பை போலவே, பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டரை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த டிவிட்டரை அதிகமானோர் தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கும், தெரிந்து கொள்வதற்கும் உபயோகம் செய்து வருகிறார்கள்.
இந்த டிவிட்டரில் மற்றவர்களுடன் பேசுவதற்கு மெசேஜ் செய்யும் வசதிகள் இருக்கிறது. ஆனால், பயனர்கள் கால் செய்து பேசும் வசதி இல்லை. ஆனால், அதற்கு இனிமேல் கவலை வேண்டாம். ஏனென்றால், அதற்கான வசதிகள் விரைவில் வரவுள்ளதாக டிவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் டிவிட்டரில் கூறியதாவது ” டிவிட்டரில் இனிமேல் குரல் மற்றும் வீடியோ கால விரைவில் வரும், எனவே உங்கள் ஃபோன் எண்ணைக் கொடுக்காமலேயே உலகில் எங்கிருந்தாலும் அவர்களிடம் பேசலாம்” என அறிவித்துள்ளார்.
இனிமேல் டிவிட்டரிலும் குரல் மற்றும் வீடியோ கால் செய்யும் வசதி வருவதால் பயனர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், நீண்ட நாட்களாக உபயோகப்படுத்தாமல் இருக்கும் ட்விட்டர் கணக்குகள் இருந்தால் அவர்களுடைய கணக்கை நீக்கம் செய்யப்பட போவதாக எலான் மஸ்க் இதற்கு முன்னதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…