நாளை பிரதமர் மோடி சென்னைக்கு வருவதை ஒட்டி காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னையில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி கனரக மற்றும் சரக்கு வாகனங்களை சென்னை பெருநகர எல்லைக்குள் வர அனுமதி இல்லை. மாநகர பேருந்துகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் நாயர் பாலத்தின் வழியாக பாந்தியன் ரவுண்டானா, சித்ரா பாயிண்ட் வழியாக அண்ணா சாலை வழியாக செல்லலாம்.
ராயபுரத்தில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் இப்ராஹிம் சாலை மின்ட் சந்திப்பு, பேசின் பாலம், எருக்கஞ்சேரி ரோடு, அம்பேத்கர் சாலை, புரசைவாக்கம் வழியாக செல்லலாம். அண்ணா சாலையில் இருந்து ராயபுரம் நோக்கி வரும் வாகனங்கள் ஸ்பென்ஸர் பென்னி ரோடு, மார்ஸல் ரோடு, ராயர்பாலம், டவுட்டன் வழியாக செல்லலாம்.
சவுத்கெனல் ரோட்டிலிருந்து காந்தி சாலை நோக்கி வரும் வாகனங்கள் கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக செல்லலாம் என தெரிவிக்கப்படுகிறது. வாகன ஓட்டிகள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு சென்னை பெருநகர் போக்குவரத்து காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
Tech Mahindra: ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா நிறுவனம் இந்த ஆண்டு, 6000 இளைஞர்களை புதியதாக பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது. நாட்டின் ஐந்தாவது பெரிய தகவல்…
Election2024: இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் காலை 11 மணி வரை திரிபுராவில் அதிகபட்சமாக 36.42% வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல். மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட…
Vijayakanth : வாட்ச் மேன் தூங்கிக்கொண்டு இருந்தபோது விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கேப்டன் விஜயகாந்த் சாப்பாடு போட்டு உதவி செய்வது பலருக்கும்…
VVPAT Case : 100% தேர்தல் ஒப்புகை சீட்டு சரிபார்ப்பு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்களை இதில் காணலாம். தேர்தல் வாக்குப்பதிவின் போது, EVM மிஷினில்…
China: சீனா தனக்கென சொந்தமாக உருவாக்கியுள்ள விண்வெளி நிலையத்திற்கு 3 விண்வெளி வீரர்களை 6 மாத பணிக்காக அனுப்பியுள்ளது. விண்வெளியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக ரஷ்யா உட்பட உலக…
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி…