ஆசிய தொடரில் இன்றைய போட்டியில் இலங்கையுடன் இந்திய அணி மோதவுள்ளது. இதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
6 ஆசிய நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி, நேற்று முன்தினம் நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது இந்திய அணி.
ஆதலால், இந்திய அணி அடுத்தடுத்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதில், 2 போட்டிகளிலும் ரன்ரேட் அதிகமாக வைத்து வெற்றி பெற்றால் மட்டுமே, இறுதி போட்டிக்கு முன்னேற முடியும் சூழல் உருவாகியுள்ளது.
இன்றைய போட்டியில் இலங்கையுடன் இந்திய அணி மோதவுள்ளது. இதில் வெற்றி பெற்று அடுத்து ஆப்கானிஸ்தான் அணியுடனும் மோதி வெற்றி பெற வேண்டும். அப்போது தான் 4 புள்ளிகள் பெற்று முன்னேற முடியும். அதே போல, பாகிஸ்தான் அணியும், அடுத்து, ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை உடன் மோதவுள்ளது. அவற்றில் பாகிஸ்தான் ஏதேனும் ஒன்று ஜெயித்து அதிக ரன் ரேட் வைத்திருந்தாலும் இறுதி போட்டிக்கு முன்னேறி விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய ஆசிய கோப்பை தொடர் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை துபாய் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி 7.30க்கு இந்த போட்டி தொடங்குகிறது.
சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம்…
சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில…
சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த…
சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. - தமிழிசை பேட்டி. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி…
சென்னை : மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.…