பந்து வீச்சில் மிரட்டிய அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான்… 116 ரன்களுக்கு ஆல் அவுட்..!

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று தொடங்கியுள்ளது. இப்போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி  முதலில் பேட்டிங் தேர்வு செய்து.

அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 27.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுத்தன. இதில் அதிகபட்சமாக டோனி டி ஜோர்ஜி 28 ரன்களும், ஆண்டிலே 33 ரன்களும் மட்டுமே எடுத்தனர். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் ஐந்து விக்கெட்டுகளையும், அவேஷ் கான் நான்கு விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டை பறித்தனர்.

அர்ஷ்தீப் சிங் 10 ஓவர்கள் வீசி 37 ரன்கள் கொடுத்து ஐந்து விக்கெட் பறித்தார். அவேஷ் கான் 8 ஓவர் வீசி 3  ஓவர் மெய்டன்  செய்து 27 ரன்கள் கொடுத்து நான்கு விக்கெட்டை பறித்தார். 117 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.