Afraid
Life style -பயத்தை போக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி இப்பதிவில் காணலாம்.
நாம் கோபப்படுகிறோம் என்றால் அதனால் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் ,ஆனால் பயம் நம்மையே பாதிக்கச் செய்யும். அது எப்படி என்றால் பயம் நம் தன்னம்பிக்கையை இழக்க செய்யும் .பயம் நமக்கு தைரியத்தை கொடுக்காததால் எந்த ஒரு புது முயற்சிகளிலும் ஈடுபட மாட்டோம் .
இதனால் பல இடங்களிலும் தோல்வியை தழுவுவீர்கள். பயத்தால் மனிதர்களை எதிர் கொள்ள தயங்குவீர்கள். உதாரணமாக ஒரு திருமண விழாவிற்கு செல்வதற்கோ அல்லது கூட்டமான இடங்களுக்கு செல்வதையோ தவிர்ப்பீர்கள் இதனால் உங்களுக்கு நண்பர்கள் வட்டாரம் பெருமளவில் இருக்காது. அதேபோல் வாய்ப்புகளும் உங்களுக்கு மிகக் குறைவாகத்தான் கிடைக்கும் .
மேலும் இங்கு பலருக்கும் எக்ஸாம் ஹாலுக்கு சென்றால் பயம், ரிசல்ட் வரும்போதும் பயம், இன்டர்வியூ செல்லும் போதும் பயம் இருக்கும். புதிதாக தொழில் தொடங்குவதற்கும் பயம் இப்படி அனைத்திற்குமே பயம் இருக்கும். இதில் உள்ள நன்மையும் தீமையையும் நாம் எதிர் கொள்ளத்தான் போகிறோம்.
பயம் நமக்கு இருக்க வேண்டும் தான் ,பயம் இருந்தால்தான் பொறுப்பு இருக்கும் அதன் மூலம் நாம் வாழ்க்கையில் வளர முடியும் .ஆனால் அது அளவுக்கு மீறி செல்லும்போது தான் வாழ்வாதாரமே பாதிப்படைய செய்து விடுகிறது.
எந்த விஷயத்தில் உங்களுக்கு பயம் இருக்கிறதோ அதை திரும்பத் திரும்ப செய்ய வேண்டும். உதாரணமாக நீங்கள் ஒரு இடத்திற்கு செல்ல பயப்படுகிறீர்கள் என்றால் அங்கு திரும்ப திரும்ப செல்லுங்கள் .அல்லது ஒரு நபரை சந்திக்க பயப்படுகிறீர்கள் என்றால் அந்த நபரை திரும்பத் திரும்ப சந்தியுங்கள் இவ்வாறு செய்யும்போது பயம் உங்களை விட்டு நீங்கும்.
பயத்தின் மூல காரணம் நமக்கு ஏதேனும் தப்பா நடந்திடுமோ என்ற எண்ணம் தான். உதாரணமாக எக்ஸாம் ரிசல்ட் காக காத்திருக்கும் போது பயம் வரும். அந்த சமயங்களில் வந்தா வரட்டும் பாத்துக்கலாம் என்று எண்ண துவங்குங்கள் தைரியமாக எதிர் கொள்ள தயாராக இருங்கள்.
ஒருவேளை நீங்கள் பெயில் ஆகி விடுவீர்கள் என்று பயம் இருந்தால் அப்படி நடந்தால் தான் என்ன ஆகிவிடும் என்று யோசித்துப் பாருங்கள்.. இப்படி நீங்கள் எதற்கெல்லாம் பயப்படுகிறீர்கள் என்று ஒரு பேப்பரில் எழுத துவங்குங்கள். அந்த விஷயங்களை வைத்து அப்படி நடந்தால் தான் என்ன ஆகப் போகிறது என்றும் யோசித்துக் கொள்ளுங்கள் .
எது நடந்தாலும் எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று யோசிக்க துவங்குங்கள் ,வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள். இவற்றை நீங்கள் சிந்தித்தாலே பயம் உங்களை விட்டு ஓடிவிடும்.
டீன்ஸ் : இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் அடுத்ததாக 'டீன்ஸ்' என்ற திரைப்படத்தினை இயக்கி அதில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். வித்தியாச வித்தியாசமான படங்களை இயக்கி மக்களை கவர்ந்து…
ஜார்கண்ட்: சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் I.N.D.I.A கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றார். ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரியில்…
பிசிசிஐ : நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு பிசிசிஐ பரிசுத்தொகையாக ரூ.125 கோடிக்கு அளித்துள்ளனர். அதனை இந்திய வீரர்கள் எப்படி பிரித்துக்கொள்வார்கள் என்பதை…
மின்தடை : நாளை ( ஜூலை 9 /7/2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தை பார்க்கலாம். வடசென்னை மாதம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூர், கரடிமடை,…
சேலம்: பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது என இபிஎஸ் குற்றசாட்டை முன்வைத்துள்ளார். கடந்த ஜூலை 5ஆம் தேதி…
அபிஷேக் சர்மா : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அபிஷேக் சர்மா இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். அதன்படி தற்போது, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக…