ரஷ்யா, சைபீரியா மாகாணத்தில் மின் நிலையத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் அங்குள்ள அம்பர்ன்யா நதி, மாசடைந்து சிகப்பாக காட்சியளிக்கிறது.
ரஷ்யாவின் சைபீரிய மாகாணத்தில் உள்ள அம்பர்ன்யா நதி, தற்பொழுது சிகப்பு நிறமாக காட்சியளிக்கிறது. இது குறித்து விசாரிக்கையில், அந்த நதிக்கு அருகில் உள்ள மின் நிலையத்தில் உள்ள எண்ணெய் தொட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை தீடீரென எண்ணெய் கசிவு ஏற்பட்டது.
இதனால் தொட்டியில் இருந்த சுமார் 20,000 டன் எண்ணெய் முழுவதும் அருகில் உள்ள அம்பர்ன்யா நதியில் கலந்தது. சம்பம் நடைபெற்று இரண்டு நாட்களுக்கு பின்னர் பாதிப்பை கண்டறிந்த அதிகாரிகள், ஆற்றில் கலந்துள்ள எண்ணெய்யை நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், ஆற்றில் எண்ணெய் கசிவை ஏற்படுத்திய மின் நிலையம் உலகின் முன்னணி நிக்கல் மற்றும் பல்லேடியம் உற்பத்தியாளரான, நோரில்ஸ்க் நிக்கலின் துணை நிறுவனத்திற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. ஆனால், இந்த எண்ணெய் கசிவு, 350 சதுர கிலோ மீட்டர் அளவிலான ஆற்றை மாசுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக நேற்று காணொலிக்காட்சி மூலம் பேசிய ரஷ்ய அதிபர், எண்ணெய் கசிவை தாமதமாக கண்டுபிடித்ததற்கும், அதிகாரிகளின் அலட்சித்திற்கும் அவர் கடிந்துகொண்டார். அதுமட்டுமின்றி, இந்த விபத்து தொடர்பாக அதிபரிடம் முழுவதும் எடுத்துரைத்துள்ளதாக சைபீரிய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…