நாளை அதிமுக இரண்டாம் கட்ட உட்கட்சி தேர்தல் – தலைமை அறிவிப்பு!

அதிமுக இரண்டாம் கட்ட உட்கட்சி தேர்தல் நாளை மற்றும் நாளை மறுதினம்(22,23 ஆம் தேதிகளில்) நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

அதிமுக கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும்‌ மாவட்டங்களைச்‌ சேர்ந்த,ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளை நிர்வாகிகள்‌, பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு நிர்வாகிகளுக்கான இரண்டாவது கட்ட உட்கட்சி தேர்தல் நாளை மற்றும் நாளை மறுதினம் (வரும் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில்) நடைபெறவுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து முன்னதாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

“அதிமுக இரண்டாவது கட்ட அமைப்பு தேர்தல் வரும் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக இரண்டாம்‌ கட்ட கழக அமைப்புத்‌ தேர்தல்கள்‌ வருகின்ற 22, 23 ஆகிய தேதிகளில்‌ நடைபெற உள்ளதையொட்டி, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும்‌ கீழ்க்கண்ட மாவட்டங்களைச்‌ சேர்ந்த, ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைக்‌ கழக நிர்வாகிகள்‌,பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்துவதற்கு மட்டும்‌, மாவட்டத்‌ தேர்தல்‌ பொறுப்பாளர்கள்‌ மற்றும்‌ ஒன்றிய, பேரூராட்சி, நகரம்‌ மற்றும்‌ மாநகராட்சிப்‌ பகுதிகளுக்கான தேர்தல்‌ ஆணையாளர்கள்‌ பட்டியல்‌ இத்துடன்‌ வெளியிடப்படுகிறது.

கழக அமைப்புத்‌ தேர்தல்களை நடத்துவதற்கான வாக்காளர்‌ பட்டியல்‌ (கழக உறுப்பினர்கள்‌), மினிட்‌ புத்தகம்‌, விண்ணப்பப்‌ படிவம்‌, ரசீது புத்தகம்‌, வெற்றிப்‌ படிவம்‌ முதலானவை சம்பந்தப்பட்ட மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்‌ தேர்தல்‌ பொறுப்பாளர்கள்‌ அவற்றைப்‌ பெற்று, ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும்‌ மாநகராட்சி பகுதிகளுக்கான தேர்தல்‌ ஆணையாளர்களிடம்‌ வழங்கி, கழக சட்ட திட்ட விதிமுறைகளின்படி, கழக அமைப்புத்‌ தேர்தல்களை முறையாக நடத்திட வேண்டும்‌ என்று கேட்டுக்‌ கொள்கிறோம்‌. கழக அமைப்புத்‌ தேர்தல்கள்‌ சுமூகமாக நடைபெறும்‌ வகையில்‌, மாவட்டத்‌ தேர்தல்‌ பொறுப்பாளர்கள்‌ மற்றும்‌ தேர்தல்‌ ஆணையாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச்‌ சேர்ந்த கழக நிர்வாகிகளும்‌, கழக உடன்பிறப்புகளும்‌ முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்‌ என்றும்‌ கேட்டுக்கொள்கிறோம்‌”, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக  உட்கட்சி தேர்தல் 2 கட்டமாக நடைபெறுகிறது.அதன்படி, முதற்கட்டமாக கடந்த 13, 14 ஆகிய தேதிகளில் 19 மாவட்டங்களில் உட்கட்சி தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

‘வெற்றியை கொண்டாட எங்களுடன் சேருங்கள்’- ஜெய்ஷா டிவீட் ..!

பிசிசிஐ : இந்த ஆண்டில் நடைபெற்று வந்த மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிறைந்த தொடர் தான் 20 ஓவர் உலகக்கோப்பை தொடராகும். இந்த தொடரில் இந்திய அணி மிக பிரமாதமாக…

5 hours ago

கங்கானாவை அறைந்த பெண் காவலருக்கு பெங்களூருக்கு பணிமாற்றமா.? CISF புது விளக்கம்.!

பாஜக எம்.பியும், நடிகையுமான கங்கனா ரனாவத்தை தாக்கிய விவகாரத்தில், இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை (CISF) பெண் காவலர் குல்விந்தர் கவுர், மீண்டும் பணியில்…

5 hours ago

கதை கேட்ட சிவகார்த்திகேயனுக்கு முக்கிய கண்டிஷன் போட்ட எச்.வினோத்?

சிவகார்த்திகேயன் : இயக்குனர் எச்.வினோத் அடுத்ததாக விஜயின் 69-வது திரைப்படத்தினை இயக்கவுள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது. தகவல்களாக வெளியாகி இருக்கிறது என்பதை தவிர அதிகாரப்பூர்வமாக எந்த…

6 hours ago

மீண்டும் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.? ஏற்பாடுகள் தீவிரம்…

ஜார்கண்ட்: அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் போதிய ஆதாரமில்லை என ஜாமினில் வெளியில் வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்கண்ட் மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ளார் என…

6 hours ago

நாகப்பாம்பு வாயில் சிக்கிய மருந்து பாட்டில்! வைரல் வீடியோ…

ஒடிசா: புவனேஸ்வரில் தனது இரை என நினைத்து இருமல் மருந்து பாட்டிலை நாகப்பாம்பு உட்கொண்ட போது அதன் வாயில் சிக்கிக் கொண்டது. பின்னர், வலியால் துடித்த நாகப்பாம்புவின்…

6 hours ago

சிறுவனை தாக்கிய தெருநாய்கள் ..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சி!!

தெலுங்கானா : சமீபத்தில் அதிகமாக தெருநாய்கள் தாக்கிய செய்திகள் கேட்பதோடு வீடியோ கட்சிகளும் வெளியாகி நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. அதே போல ஒரு சம்பவம் தற்போது ஹைதராபாத்தில்…

6 hours ago