அதிமுக பொதுக்குழு – உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…!

ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். 

சென்னை உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. ஜூலை 11ம் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அதிமுகவில் ஜூன் 23 – க்கு முந்தைய நிலையே தொடரும் என்றும் கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது எனவும் தனி நீதிபதி ஜெயசந்திரன் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான தடை நீங்கியது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்று ஈபிஎஸ் ஆதரவலார்களர்கள், இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Comment