அரசுபள்ளி ஆசிரியர் உட்பட 3 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு.! சொத்து தகராறு காரணமா.?

விழுப்புரத்தில் அரசு பள்ளி ஆசிரியரை அவரது சகோதரர் அரிவாளால் வெட்டி தாக்கியுள்ளார். தடுக்க வந்த மாணவர்களுக்கும் அரிவாள் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. 

விழுப்புரம் அருகே கோலியனுர் எனும் ஊரில் இயங்கி வரும் அரசு மேல்நிலை பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார் ஆசிரியர் நடராஜன். இவருக்கும் இவரது சகோதரருக்கும் சொத்து தகராறு என கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று தனது சகோதரரை பள்ளிக்கு அருகே சந்தித்து பேசியுள்ளார் ஆசிரியர் நடராஜன். அந்த சமயம் பேச்சுவார்த்தை முற்றி ஆசிரியர் நடராஜனின் சகோதரர், நடராஜனை அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதனை அருகில் இருந்த பள்ளி மாணவர்கள் பார்த்துள்ளனர். உடனே அதனை தடுக்க முயன்றுள்ளனர். இதில், 3 பள்ளி மாணவர்களுக்கும் லேசான அரிவாள் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக நடராஜனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து  வளவனுர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரிவாள் வெட்டு காயம் ஏற்பட்ட ஆங்கில ஆசிரியர் நடராஜன் மற்றும் மாணவர்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

47 mins ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

2 hours ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

8 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

14 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

14 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

14 hours ago