தமிழர்களின் நிலை
ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த தமிழர்களில், 8 பேரின் நிலை இதுவரை தெரியாமல் இருந்த நிலையில், தற்போது அதில் 3 பேர் பாதுகாப்பாக இருப்பதாக மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும்,சென்னையை சேர்ந்த ஜெகதீசன் கோவையை சேர்ந்த நாரகணி கோபி ஆகிய இருவரும் வீடு திரும்பினர் என்றும், கமல் என்பவர் ரயிலில் பயணிக்கவில்லை எனவும் மீதமுள்ள 5 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4.6.2023 – 5.00PM
நிவாரண தொகை அறிவித்த ஆந்திர முதலமைச்சர்
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த ஆந்திராவைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் வழங்கப்படும் எனவும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 5 லட்சம் மற்றும் சிறு காயங்கள் அடைந்தவர்களுக்கு 71 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் அறிவித்துள்ளார்.
4.6.2023 – 4.00PM
இலவச பேருந்து சேவை
ஒடிசா ரயில் விபத்து காரணமாக கட்டாக், பூரி, புவனேஸ்வரில் இருந்து கொல்கத்தாவுக்கு இலவச பேருந்து சேவையை என முதலமைச்சர் நவீன் பட்நாயக் தற்போது அறிவித்துள்ளார்.
4.6.2023 – 3.45PM
ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்
ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
4.6.2023 – 3.15PM
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
வெப்ப சலனம் காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கலாம்; ஓரிரு இடங்களில் இயல்பில் 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கலாம்.
4.6.2023 – 2.29 PM
5 லட்சம் நிவாரணம்
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 1 லட்சமும் வழங்கப்படும் என்றும்,உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தீ விபத்து
டெல்லியின் ஜஹாங்கிர்புரியில் உள்ள குடிசைப் பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 11-12 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்ததாக டெல்லி தீயணைப்பு சேவைகள் உதவி பிரிவு அதிகாரி ஆர்.கே.சின்ஹா தெரிவித்தார். அப்பகுதியில் குப்பைகள் கிடக்கும் திறந்தவெளிப் பகுதியில் தீ பரவத் தொடங்கியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4.6.2023
Ilaiyaraaja : அனுமதியின்றி பாடலை பயன்படுத்தியதாக 'கூலி' பட தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…
Hindu Marriage : இந்து மத சடங்குகளோடு திருமணம் செய்யப்படாவிட்டால் அந்த திருமணம் இந்து முறைப்படி செல்லாது என உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. உத்திரப் பிரதேச தம்பதியினர்…
Gold Price: மே மாதத்தின் தொடக்க நாளான இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…
Rohit Sharma : பிறந்தநாளக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் ராசி இல்லை என அவரது ரசிகர்கள் கவலையில் இருந்து வருகின்றனர். இந்திய அணியின் கேப்டனும், மும்பை அணியின் முன்னாள்…
Ajith Kumar : இன்று அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அவருடைய மனைவி ஷாலினி பெரிய கிஃப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான…