‘சசிகலாவிடம் பங்கு’ “அவர் ஒன்னும் அதிபர் கிடையாது” அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்..!!

நடிகர் கருணாஸ் ஒன்னும் அமெரிக்கா , ரஷ்ய , இங்கிலாந்து அதிபர் கிடையாது சசிகலாவிடம் பங்கு வாங்கியவர் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை ,

நவராத்திரியை முன்னிட்டு சென்னை குரலகத்தில் கதர் கிராம தொழில்வாரியம் சார்பில் நடைபெற்ற கொலு பொம்மை கண்ணகாட்சியை இன்று அமைச்சர் ஜெயக்குமார் தொடக்கி வைத்தார்,அப்போது அவரிடம் இந்த ஆட்சியில் தனக்கும் பங்கு உண்டு என்று கூறிய நடிகரும் , சட்டமன்ற உறுப்பினரான கருணாஸ் கூறியது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் கேட்டபோது , அமைச்சர் ஜெயக்குமார் நடிகர் கருணாஸ் சசிகலாவிடம் பங்கு வாங்கி இருப்பர்.அவர் என்ன அமெரிக்கா அதிபரா இல்ல இங்கிலாந்துஅதிபரா இல்ல ரஷ்ய அதிபரா இதெல்லாம் ஒரு கேள்வி மாதிரி கேட்குறீங்க என்று நழுவினார்.

கடந்த ஞாயிறு முக்குலத்தோர் புலிப்படை ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகர் கருணாஸ் தமிழ்நாடு முதல்வரையும் , காவல்துறை அதிகாரிகளையும் சரமாரியாக பேசினார்.அது மட்டுமில்லாமல் அவர் பேசும் எடப்பாடி அரசு அமைய காரணம் நான் தான்.கருணாஸ் இல்லாமல் இந்த அரசாங்கம் அமைந்து இருக்காது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU 

 

Leave a Comment