ரூ.39 ஆயிரத்தை தாண்டியது தங்கம்…அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ரூ.39,056-க்கு விற்பனை.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ரூ.39,056க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து, ரூ.4,882க்கு விற்பனையாகிறது. 24 கேரட் ஆபரணதங்கத்தின் விலை, 8 கிராம் ரூ.4,2248-க்கு விற்பனையாகிறது.

இதுபோன்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு உயர்ந்து, ரூ.71.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.71,300-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில், இன்று ஆபரணதங்கத்தின் விலை சவரன் ரூ.39 ஆயிரத்தை தாண்டியிருப்பது நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.