காசிமேட்டில் கடந்த 55 நாட்களுக்கு முன்பு காணாமல் போன 9 மீனவர்கள் மீட்பு.
சென்னை காசிமேடு பகுதியில் 9 மீனவர்கள் கடந்த 55 நாட்களுக்கு முன்பு காணாமல் போகினர். இவர்களை தேடும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், இவர்கள் 9 பேரும் மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மீன் வள துறை அமைச்சர் ஜெயக்குமார், மீட்கப்பட்ட மீனவர் குடும்பத்தினருடன் தற்பொழுது செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், தொலைந்த காசிமேடு மீனவர்களை தொடர்ச்சியாக தேடி வந்தோம். அவர்களது குடும்பத்தினரும் என் மீதும் அரசு மீதும் நம்பிக்கை இருப்பதாக சொல்லி வந்தார்கள். நாங்கள் பங்களாதேஷ், மியான்மர், தாய்லாந்த் மற்றும் ஆகிய இடங்களுக்கு மீனவர்கள் காற்றின் வேகத்தால் வந்திருக்க கூடும் என தகவல் அளித்திருந்தோம்.
இறுதியாக பர்மா மியான்மரில் உள்ள அத்தியாசி யாங்கூர் ஆகிய இடத்தில 9 பெரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்கள் படகுடன் நலமாக இருப்பதாகவும் தகவல் வந்துள்ளதுடன் புகைப்படங்களும் அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் தமிழகத்துக்கு அவர்களை கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும், மீனவர்களின் குடும்பத்தினரும் தற்பொழுது மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என கூறியுள்ளார்.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…