ஆந்திர மாநிலம் திருப்பதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தை சேர்ந்த 6 பேரை ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள பாக்கராபேட்டை வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்பு போலீஸார் சனிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளனர். அப்போது சிலர் செம்மரக்கட்டைகளை சுமந்து செல்வதை கண்ட போலீசார் அவர்களை சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்றுள்ளனர். அப்பொழுது செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட பலர் தப்பி ஓடிய நிலையில், 6 பேரை மட்டும் போலீசார் கைது செய்து உள்ளனர்.
மேலும், இவர்களிடம் இருந்த செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பலர் குழுவாக ஒரு வாரத்திற்கு முன்பாகவே செம்மரம் வெட்ட வந்தது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 18 வயதிற்கு கீழ் உள்ள இருவர் இருந்ததால், இருவரும் சிறுவர் சீர் திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், மீதமுள்ள 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை: ஒரு புதிய ஆய்வில், X குரோமோசோம் மரபணு விந்தணுக்களின் வளர்ச்சிக்கும் ஆண்களின் கருவுறுதலுக்கும் அவசியம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட CSIR-Centre for Cellular…
சென்னை : ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு இது வரை 3 அணிகள் தேர்வாகியுள்ள நிலையில் 4-வது அணிக்காக பெங்களூரு அணியும், சென்னை அணியும் நாளைய நாளில்…
சென்னை: பாஜகவுக்கு 272 எனும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அக்கட்சியின் பிளான் பி என்ன என்ற கேள்விக்கு அமித்ஷா பதில் அளித்துள்ளார். நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கான…
சென்னை : இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகிறது. ஐபிஎல் 2024 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17…
சென்னை: யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதித்தது கோவை நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர்…
சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…