ஓபிஎஸ் பெயரை பயன்படுத்தி 47 லட்சம் மோசடி…! மதுரை எஸ்.பி-இடம் புகாரளித்த இளைஞர்…!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பெயரை சொல்லி ரூ.47 லட்சம் மோசடி.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் பிரவீன். இவர் கடந்த 2019-ல் இடுக்கியில் ஏலக்காய் ஸ்டேட் வாங்க முயற்சி செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த கேரளாவை சேர்ந்த பாபு, மகேஷ் ஆகிய இருவரும் தென்காசியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ மகன் என்று கூறி முருகேசன் என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அவர் குறைந்த வட்டியில் ரூ.10 கோடி ரூபாய் பணம் பெற்று தருவதாக பிரவீனிடம்  தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து அவர்கள் மூவரும் இணைந்து மதுரை சேடப்பட்டி சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் அறிமுகம் செய்து வைத்துள்ளனர். அவர் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நெருங்கிய உறவினர் என்றும், சேடப்பட்டி கூட்டுறவு வங்கி தலைவர் என்றும் பிரவினிடம் தன்னை அறிமுகம் செய்துள்ளார்.

இதனை அடுத்து, அவர் பிரவீனிடம் ஆவண செலவு மற்றும் ரொக்கம் கமிஷனாக 47 லட்சம் ரூபாய் பணத்தை முத்திரைத் தாளில் கையெழுத்திட்டு வாங்கியுள்ளார். ஆனால் பிரவீனை பணம் பெற்று தராமல் ஏமாற்றி வந்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரவீன், தன்னை ஏமாற்றிய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்குமாறும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் குடும்பத்துடன் வந்து மனு அளித்துள்ளார்.

Recent Posts

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் பரப்புரை இன்றுடன் ஓய்கிறது.!

சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…

2 mins ago

ஒரு வழியா முடிஞ்சது! ‘கோட்’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!

சென்னை : கோட் படத்தின் VFX பணிகள் நிறைவடைந்துவிட்டதாக இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் விஜய்யை வைத்து கோட் படத்தினை…

20 mins ago

பிரதமரின் தோல்வி பயம் என்னவெல்லாம் செய்யும்.? முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்..

சென்னை: தோல்வி பயத்தில் பாஜகவினர் தொடர்ந்து வீண்பழி சுமத்துகிறார்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவருகிறது. 7 கட்ட தேர்தலில்…

30 mins ago

தொடர் மழை…நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!

சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்…

51 mins ago

சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் பலி!

சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப்…

52 mins ago

வீட்டுக்குள் செடி வளர்க்கிறீர்களா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

Plant-வீட்டிற்குள் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம் என்றும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். தற்போது மாறி வரும் நவீன உலகில் காடுகள் ,வயல்வெளிகள் இருக்கும்…

1 hour ago