பாகிஸ்தானில் நான்கு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த 19-ஆம் தேதி தென்மேற்கு பலூசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் நான்கு பயங்கரவாதிகளை கொலை செய்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. பலூசிஸ்தானின் அவாரன் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் இருப்பதை உறுதி செய்வதற்காக பாதுகாப்புப் படையினர் உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கையை மேற்கொண்டபோது, நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
ராணுவத்தின் ஊடகப் பிரிவான இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷனின் அறிக்கையில், பயங்கரவாதிகளின் மறைவிடமும், ஒரு தளவாட தளமும் அழிக்கப்பட்டன. அதே நேரத்தில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகியவை மீட்கப்பட்டன. ராணுவ அறிக்கையில் பயங்கரவாதிகளின் தொடர்பு பற்றிய தகவல்களை வழங்கவில்லை. நேற்று வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் வஜீரிஸ்தான் பகுதியில் பாதுகாப்புப் படையினர் ஒரு பயங்கரவாத தளபதியையும் மற்ற மூன்று பயங்கரவாதிகளையும் கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும், மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…
Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப்…
Prajwal Revanna : பாலியல் புகார் விசாரணை முடியும் வரையில் மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பியாக…
Heat Wave: வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்வது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழ்நாடு…
Shah Rukh Khan : ரிஷப் பண்டுக்கு ஏற்பட்ட கார் விபத்தில், அவருக்கு ஒன்றும் ஆக கூடாது என்று நடிகர் ஷாருக் கான் கவலைப்பட்ததாக நேற்றைய போட்டியின் முடிவின்…
Jasprit Bumrah : கடந்த 2 போட்டிகளில் பும்ராவின் ஆட்டம் மந்தமாக இருக்கிறது என ஆகாஷ் சோப்ரா விமர்சித்து பேசியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும்…